கோபாலப்பட்டிணத்தில் 4-வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் காத்திருப்பு ஷாஹின் பாக் போராட்டம்.! (புகைப்படங்கள்)



குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறக்கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஷாகின் பாக் தொடர் காத்திருப்புப் போராட்டம் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

4 வது நாள் தொடர் இருப்பு போராட்டம்

இன்று 04-03-2020  புதன்கிழமை ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள், SDPI மாநில செயலாளர் சித்திக் அவர்கள் , நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த போராட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான  ஆண்கள் பெண்கள் , சிறுவர்கள் உள்பட திரளானோர்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.









கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments