திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 15ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.
இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 18வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்று எதிர்ப்பு கோசங்கள், பெண்கள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி, எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் அகமது நவவி, வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் வழக்கறிஞர் அசரப் அலி ஆகியோர் பேசினர்.
இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண், பெண்கள் ரத்ததானம் செய்தனர். போராட்டகளத்தில் இஸ்லாமியர்கள் ரத்ததானம் செய்த சம்பவம் முத்துப்பேட்டை சுற்று பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.