குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில் பரவி வருகிறது. குவைத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விடுமுறை இடப்பட்டுள்ளதாக குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் முஜ்ராம் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார். மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை அரசு சரி செய்யும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ள தாரிக் அல் முஜ்ரம், பெற்றோர் மீதமுள்ள பள்ளி கட்டணங்கள் கட்ட நேரிடாது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக மார்ச் 25-ஆம் தேதிவரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதல் மேற்கண்ட அறிவிப்பை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.