கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு!



கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய இடங்களில் கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை மற்றும் R.புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களில் முக்கிய இடங்களில் கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் சார்பாக நேற்று 23.03.2020 திங்கள்கிழமை கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்க விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், கைகளை அடிக்கடி கழுவுவதற்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாயக்கூடம் மற்றும் காட்டுபள்ளிவாசல், மீமிசல் பகுதியில் காவல் நிலையம், கல்யாணராமர் கோவில், மாரியம்மன் கோவில், பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் மாரிமுத்து கிளினிக் (கணேசன் டாக்டர்), கிளினிக் அருகில் உள்ள கோவில், ஏம்பக்கோட்டையில் இரண்டு பாள்ளிவாசல்களில் தெளிக்கப்பட்டது. மேலும் R.புதுப்பட்டிணத்தில் பள்ளிவாசல், தர்கா மற்றும் சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  

















கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments