கரோனா வைரஸ் தொற்று பீதியால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி மட்டுமின்றி கறிக்கோழி வணிகமும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியதாலும், அதன் தாக்கம் நாமக்கல்லிலும் இருக்கலாம் என வதந்தியால், இத்தொழில் கடந்த ஒரு மாதமாக கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு மையம் எனப்படும் என்இசிசி நிர்ணயம் செய்தாலும்கூட, அதைவிட 70 முதல் 90 காசுகள் வரை குறைத்தே பண்ணையாளர்கள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 18) என்இசிசி, முட்டை விலையை அதற்கு முந்தைய விலையான 265 காசுகளில் இருந்து தடாலடியாக 70 காசுகளை குறைத்து 195 காசுகளாக நிர்ணயம் செய்தது. இந்த விலைக்குக் குறைவாக யாரும் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் என்இசிசி தலைவர் மருத்துவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அடுத்து, மார்ச் 25ம் தேதிதான் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்றாலும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தடாலடியாக முட்டை விலையைக் என்இசிசி குறைத்துள்ளது இப்போதுதான் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த விலையில் இருந்தும் 20 காசுகள் வரை குறைத்தே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேநிலை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தால்கூட, ஒரேயடியாக கோழிப்பண்ணைகளை அழித்துவிட்டு தொழிலில் இருந்து வெளியேறி விட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.