தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் நடைபெறும் ஷாஹீன் பாக் போராட்டங்களை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என நேற்று தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டிருந்துனர்.
இந்நிலையில் அதிரையில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில் தொடர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்து தெரு ஜமாத் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்டாலும், வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராடுவது மற்றும் பல போராட்டங்களை முன்னெடுப்பது என அறிவிப்பு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.