அறந்தாங்கி வாரச்சந்தையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்



அறந்தாங்கி நகராட்சி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்திய அலுவலா்கள்.
அறந்தாங்கி வாரச்சந்தையில் நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அறந்தாங்கி நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் உத்தரவின் பேரில், ஆய்வாளா் எஸ். சேகா் தலைமையிலான அலுவலா்கள் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இங்குள்ள 750 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட 5 நெகிழப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து ரூ.7,500 அபராதம் வசூலிக்கப்பட்டு அவை நகராட்சிக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments