CAA-விற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிராம்பட்டிணத்தில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்.!



அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


இந்நிலையில் CAA-விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


நூற்றாண்டு விழா நடைபெறும் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெளியேறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கல்லூரி விழாவில் பங்கேற்றுவிட்டு அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரைவாக கல்லூரியைவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பொதுமக்கள், அமைச்சரை அழைத்த கல்லூரியை கடுமையாக கண்டித்தனர்.

இதனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments