மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொண்டியில் நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு புறாக்களின் மூலமாக தூது செய்தி அனுப்பி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மத்திய அரசின் கொடுங்கோல் சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 20-ஆவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொடர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புறாக்களின் மூலமாக தங்களின் செய்தியை அனுப்பி கண்டனத்தை பதிவு செய்வதனர்.
இந்த நூதன போராட்டத்தில் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் இருப்பு போராட்டம் மற்றும் நூதன போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.