உலகத்தையே கரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் சி.ஏ.ஏ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் நூதன போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தொடந்து 20 நாட்களை கடந்தும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக் கொண்டு, வாயில் கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, மறைந்த தேசிய தலைவர்கள் அணிவகுக்க பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று 11.03.2020 புதன் கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கணக்குகளை முடித்துக் கொள்கிறோம். எங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொடுங்கள் என்று இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் கணக்கு புத்தகங்களுடன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். அதனால் வங்கி அதிகாரிகள் திணறிவிட்டனர்.
பணம் எடுக்க வந்த போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள், "உங்கள் கோரிக்கையை வங்கி தலைமைக்கு தெரிவிக்கிறோம். அதனால் இன்று பணம் எடுக்க வேண்டாம். நாளை வங்கிகளின் உயர் அதிகாரிகள் வருவதாக கூறியுள்ளனர். அவர்கள் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வார்கள் அதுவரை காத்திருங்கள்" என்று சமாதானம் செய்தனர். அப்படியும் பலர் சிறிய அளவு தொகைகளை வங்கியிலிருந்து எடுத்து தங்கள் எதிர்ப்பை காட்டிச் சென்றனர். கறம்பக்குடியில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.