கத்தார் நாட்டில் உணவின்றி தவிக்கும் மகனை மீட்டுக்கொண்டுவரக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உசிலங்காட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர் உசிலங்காட்டுவலசை ஊராட்சித் தலைவர் கண்ணம்மாள் மருங்கப்பன் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் செல்வராஜ்(வயது23). டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.பள்ளி விடுமுறை சமயத்தில் தனியார் ஒருவரிடம் டிரைவராக மாற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் திசை மாறி சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் எனது மகனை கண்டித்ததுடன் அடித்து துன்புறுத்தினாராம்.
மேலும், ஊதியம் எதுவும் தராமல் பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துவிட்டதால் எனது மகன் அங்கிருந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறையிலேயே பூட்டி வைத்து 3 மாதமாக கொத்தடிமை போன்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்து கத்தார் நாட்டில் வேறு வேலைக்கு செல்ல முடியாமலும் சொந்த ஊருக்கு வரமுடியாமலும் அங்கேயே சுற்றிதிரிந்துள்ளார். இதனிடையே அங்குள்ள நண்பர் ஒருவர் மீட்டு கடந்த ஒருமாதமாக உதவி செய்து தங்க வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப்பில் தனது நிலைமையை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்துதான் எனது மகனின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். உணவுக்கு கூட வழியின்றி சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வரும் எனது மகனை உடனடியாக மீட்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.