கோபாலப்பட்டிணத்தில் புதிய 'RKR' பொது சேவை மையம் நாளை திறப்பு: மினி ஏடிஎம் வசதியுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது!




கோபாலப்பட்டிணத்தில் RKR பொது சேவை மையம்  திறக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகே RKR பொது சேவை மையம்  நாளை ஏப்ரல் 22 புதன்கிழமை திறக்கப்பட உள்ளது.

இதன் சிறப்பம்சமாக, அவசரத் தேவைகளுக்காகப் பணம் எடுக்க இனி பொதுமக்கள் மீமிசல் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இம்மையத்திலேயே மினி ஏடிஎம் (Mini ATM) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து எளிதாகப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

வழங்கப்படும் இதர சேவைகள்:
பணம் எடுக்கும் வசதி மட்டுமின்றி, பல்வேறு அரசு மற்றும் பொதுச் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஆவணங்கள்: ஆதார் கார்டு சேவைகள், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், பட்டா/சிட்டா மற்றும் வாரிசு சான்றிதழ்.

பதிவு சேவைகள்: பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பான் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் திருமண உதவித் தொகை விண்ணப்பம்.

கட்டணங்கள்: மின்சாரக் கட்டணம் செலுத்துதல் மற்றும் எல்.ஐ.சி (LIC) பிரீமியம் செலுத்துதல்.

பயண முன்பதிவு: ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு.

இதர சேவைகள்: வாகன இன்சூரன்ஸ், பயிர் காப்பீடு, ஜெராக்ஸ் மற்றும் லேமினேஷன்.

பொது சேவை மையத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகறது.

தொடர்பு கொள்ள:
RKR பொது சேவை மையம்
செல்: 96776 98709
மின்னஞ்சல்: rkresevai2223@gmail.com
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments