புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ார்.
பொதுக்கூட்டங்கள்- பிரசாரம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 126-இன் கீழ் பின்வரும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதன்படி பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மின்னணு ஊடகங்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய இயலாது. இசை நாடக நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. வெளியூரிலிருந்து அரசியல் கட்சி பணிக்காக வந்துள்ள நபர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். தங்கும் இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
100 மீட்டர் தூரத்தில்
வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் செல்லத்தகாததாகி விடும். வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றிச் செல்லுதல் குற்றமாகும். தற்காலிக கட்சி அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதில் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.