NPR-க்கு எதிராக புதுக்கோட்டையில் TNTJ நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் ! (படங்கள்)



NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று 18ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.


புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு TNTJ புதுக்கோட்டை மாவட்டம் தலைவர் முபாரக் அலி  தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துனை தலைவர் பா.அப்துல் ரஹ்மான் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். புதுக்கோட்டை, அறந்தாங்கி, கோபாலப்பட்டிணம், கறம்பக்குடி, முக்கணாமலைப்பட்டி, கோட்டைப்பட்டினம் என பல ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இராண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.



கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக போராட்டக்காரர்கள் யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. இறுதியாக NRC, NPR க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments