புதுக்கோட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் மதுப்பாட்டில்.! தரையில் கொட்டி அழித்த போலிசார்!!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொன்னமராவதி போலீசார் அப்பகுதியில் தடையை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து 1,440 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் தலைமையில் அனைத்து மது பாட்டில்களும் குழிதோண்டி அதில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதேபோல் வடகாடு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் போலீஸ் நிலையம் அருகே தரையில் ஊற்றி போலீசார் அழித்தனர்.


ஆலங்குடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 450 மது பாட்டில்களையும், போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில் தரையில் ஊற்றி போலீசார் அழித்தனர். விராலிமலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 410 மதுபாட்டில்களை போலீசார் தரையில் ஊற்றி அழித்தனர்.


கறம்பக்குடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 967 மது பாட்டில்களை கறம்பக்குடி போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments