கந்தர்வகோட்டையில் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்.!



கந்தர்வகோட்டையில் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கந்தர்வகோட்டை கடை வீதியில் ஆய்வு செய்தார். அப்போது மளிகை, காய்கறி மற்றும் மருந்தகங்களை தவிர்த்து திறந்து வைக்கப்பட்டிருந்த 6 கடைகள் மற்றும் சமுதாய இடைவெளியை பின்பற்றாத 4 மளிகை கடைகளையும் சேர்த்து 10 கடைகளையும் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதில் கந்தர்வகோட்டை தாசில்தார் சதீஸ், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments