தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வருகிற 14ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ந் தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ந்தேதி தொடங்கியது.
11ம் வகுப்பில், 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணவ மாணவியர்களும், 12ம் வகுப்பில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவ மாணவியர்களும் பொதுத்தேர்வு எழுதினர்.
12ம் வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்ரல் 7ந்தேதி முதல் தொடங்க இருந்தன. இந்நிலையில் இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.