புதுக்கோட்டை நகராட்சியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தீயணைப்புத்துறையின் வாகனத்தை பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சியில் ட்ரோன் இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் 10 லிட்டர் கிருமிநாசினியை தாங்கி சென்று பரவலாக தெளிக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் நகர்பகுதி, கிராமப்பகுதி என்ற எந்த பாகுபாடுமின்றி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது தமிழக அரசால் அறிவுறுத்தப்படுகின்ற வழிமுறைகளை தவறாது கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன், மத்திய தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சேட் ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.