அறந்தாங்கியில் மது கிடைக்காத விரக்தியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!



அறந்தாங்கியில் மது கிடைக்காததால்  லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் கடை தவிர டாஸ்மாக் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் வசித்து வந்த 50 வயதான லாரி ஓட்டுநர், அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா, கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து, அறந்தாங்கியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

மதுவுக்கு அடிமையான அவர், தற்போது ஊரடங்கின் காரணமாக மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments