அறந்தாங்கியில் தடையை மீறி திறக்கப்பட்ட 11 கடைகளுக்கு ‘சீல்’



நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருந்தகம், மளிகை கடை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்த கடைகளும் திறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் திறந்து இருந்த மிட்டாய் கடைகள், பெரிய கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட 11 கடைகளையும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ் தலைமையில் சுகாதார அலுவலர் சேகர், போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் முன்னிலையில் ‘சீல்’ வைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments