புதுக்கோட்டை மாவட்டத்தில் இறைச்சிகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆடு, கோழி, மீன் இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது.

எனவே இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதற்காக மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நல அதிகாரி, போலீசார், நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே தேவைப்படின் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் 99449 59595 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments