கொரோனா காலத்தில் சென்னை திருவல்லிக்கேணி காஜாபாய் பிரியாணி கடையில் தினமும் 1000 ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை மிகவும் எளிமையாக தங்களின் வீடுகளிலேயே நேற்று கொண்டாடினார்கள்.
கொரானா வைரஸ் பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து, பொது வழிபாட்டு தலங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றிற்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மசூதிகளில் கூட்டம் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கிறது காஜா பாய் டிபன் கடை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த கடை, கொரோனா காலத்தில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவு தயாரிக்கிறது. அந்த உணவை சென்னை மாநகராட்சி மூலம் ஏழை எளிய மக்களுக்கு அளித்துவருகிறது
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று 200 ஏழைகளுக்கு பிரியாணி செய்து தந்தது பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜானை தொடர்ந்து நேற்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சமையல்காரர்களை வைத்து 200 பேருக்கு தேவையான சிக்கன் பிரியாணியை தயாரித்து வழங்கியுள்ளது.
சாலையில் வசிக்கும் வயதானவர்கள், ஏழைகள் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு அளித்ததாக கடையின் உரிமையாளர் நூருதீன் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.