புதுக்கோட்டையில் முதல் கொரோனா தொற்று நபர் குணமடைந்து வீடு திரும்பினார்: கலெக்டர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த முதல் நபர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வரை ஒரு நபர்கூட கொரோனோ தொற்றுக்கு உள்ளாகாமல்  இருந்து வந்தது. ஆனால் ஏப்ரல் 20 ஆம் தேதி புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மிரட்டுநிலையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணமடைந்து இன்று 06.05.2020 மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி  தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments