மளிகை, பெட்டிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில், எலிபேஸ்ட் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளிலுள்ள மளிகை, பெட்டிக்கடைகள், சிறு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள், வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் வணிகக் கடைகளில் , எலி பேஸ்ட் போன்ற விஷத்தன்மையுடைய பொருள்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளா்களை எச்சரித்தாா்.
மீறினால் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.