காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில் அவர் பொய்யாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அவர் அமைதியான முறையிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் . இவ்வக்கில் அவர் ஏற்கனவே மார்ச் 21 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டபோதும், விடுதலை செய்யாமல் விசாரணைக்காக மீண்டும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இஸ்ரத் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று ஜாமீன் மீதான மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஜாமீன் வழங்கியும் விடுதலை செய்யாததன் மூலம் நீதித்துறையை கேலி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரத் ஜஹான் குற்றம் சாட்டினார்.
.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராடத்தின் போது இஸ்ரத் பேசிய பேச்சுக்கள் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டி அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.