புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று 17.06.2020 வரும் 30.06.2020 வரை மாலை 5 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வர்த்தக சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் இன்று 17.06.2020 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தற்பொழுது பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே மீமிசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இன்று 17.06.2020 புதன்கிழமை இருந்து வரும் 30.06.2020 செய்வாய்க்கிழமை வரை மீமிசல் பகுதியில் உள்ள மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டீக்கடைகள் மாலை 6 மணிக்கு அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் முகக் கவசம் அணிந்தும் மற்றும் அரசு சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தரும்படி மீமிசல் வர்த்தக சங்க தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.