புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை நகரம் வடக்கு 5ஆம் வீதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவருக்கு கடந்த மே 29ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று 31.05.2020 ஞாயிற்றுக்கிழமை பகலில் உயிரிழந்தார்.
அவரது சடலம் உறவினர் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் இறுதிச் சடங்குகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை மாலை எரியூட்டப்பட்டது.
அவருக்குத் தொற்று ஏற்பட்ட விதம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது முதலாவது உயிரிழப்பாகும்.
16 பேர் குணமடைந்துள்ளனர். 13. பேருக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.