புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் சரகம் மணியம்பள்ளம் கிராமத்தில் அரங்குளவன் மனைவி மூதாட்டி ராஜம்பாள் (வயது 58). 90 சதவீதம் தீ காயங்களுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜம்பாள் உயிரிழந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ராஜம்பாளின் மருமகள் பிரதீபா (வயது 23) மற்றவர்களுக்கு சந்தேகம் வரும்படி நடந்து கொண்டது அறிந்து 9 மாத கைக்குழந்தையுடன் இருந்த் பிரதீபாவை தனியாக அழைத்து விசாரணை செய்தபோது, ஆசிரியர் பயிற்சி முடித்த என்னை ராஜம்பாள் மகன் ரமேஷ்க்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்கள். 9 மாத பெண் குழந்தை உள்ளது. ஆனாலும் வரதட்சனை கேட்டு மாமியார் ராஜம்பாள் அடிக்கடி சண்டை போடுவார். கணவருடனும் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
இதையெல்லாம் தாங்க முடியாமல் தான் சம்பவத்தன்று 100 நாள் வேலை முடிந்து களைப்பாக ஓட்டு வீட்டில் படுத்திருந்த ராஜம்பாள் உடலில் அரை லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டேன். அதனால் தீயில் கருகினார். கரும்புகை வருவதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். அவர்களுடன் நானும் போய் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இன்று இறந்துவிட்டார் என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.
பிரதீபா சிறைக்கு போனால் அவரது 9 மாத கைக் குழந்தையின் நிலை தான் பரிதாபமாக இருக்கப் போகிறது. ஏதுமறியாத பிஞ்சு குழந்தையை நினைக்கும் போது மனம் வலிக்கிறது. கைக்குழந்தையைப் பற்றி ஒரு வினாடி நினைத்திருந்தால் பிரதீபா இந்த முடிவிற்கு போய் இருக்க வாய்ப்பில்லை.
இப்படி வரதட்சனை கொடுமையால் மாமியார், மருமகள்களை தீ வைக்கும் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.