புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் புதுக்கோட்டை ரெயில் நிலையம் மூடிக் கிடக்கிறது. தற்போது வரை பயணிகளுக்கான பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் மையத்தில் வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டண தொகை திரும்ப வழங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தெற்கு ரெயில்வேயில் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டண தொகை தேதி வாரியாக திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் இதற்காக தனியாக ஒரு கவுண்ட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதில் முன்பதிவு பயணிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கட்டண தொகை திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்மொழியாக தான் இதனை ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்று இல்லையென்றால் வருகிற 8-ந் தேதி முதல் டிக்கெட் கட்டணம் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும்” என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.