டெல்டா மாவட்டங்களையே சிதைத்துப் போட்ட கஜா புயலை எப்படி அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ, அதே போலத்தான் வம்பன் 4 ரோட்டில் இருக்கும் பகவான் டீக்கடையை புதுக்கோட்டை வாசிகள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்.
கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தன் கடையில் வைத்திருந்த டீக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அசத்தினார். அதோடு, வனமகள் சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தனமரம் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தன் கடையில் வைத்திருந்த டீக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அசத்தினார். அதோடு, வனமகள் சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தனமரம் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சிவக்குமார் கொடுத்த மரங்கள் பல இன்று செழித்து வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில்தான் தற்போது, பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக, தன் கடையில் வாழ்நாள் முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் இலவசமாக வழங்குவதாக அறிவித்து, தினமும் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கி வருகிறார். டீக்கடையில் சிறிய வருமானம் கிடைத்தாலும், அதையும் வாடிக்கையாளர்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் செலவிடும் சிவக்குமாருக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுபற்றி சிவக்குமாரிடம் பேசினோம்,
கொரோனாவைக் கட்டுப்படுத்த மொதல்ல ஊரடங்கு போட்டபோது, டீக்கடை, மளிகைக் கடை எல்லாம் இல்லை. வெளிய வரமுடியாத நிலை. பால் சப்ளை இல்லை. பால் சரிவர கிடைக்காம பச்சிளங்குழந்தைகள் ரொம்பவே சிரமப்பட்டாங்க. நம்ம கடையில பாக்கெட் பால் எல்லாம் இல்லை. சுத்தமான பசும்பால் டீ தான். எனக்கு வாடிக்கையாகப் பசும்பால் கொடுங்கிறவங்க வீட்டுக்குப் போய் வாங்கி வந்து பால் கிடைக்காத குழந்தைங்க வீட்டுக்குக் கொடுத்தேன். அப்பதான், கடை ஆரம்பிச்ச உடனே குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கணும்னு தோணுச்சு. பசும்பால் கிடைக்காமலும், காசு கொடுத்து வாங்க முடியாமலும் சில குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இப்போ கடை ஆரம்பிச்சாச்சு திட்டத்தையும் அறிவிச்சு பச்சிளங்குழந்தைகள், குழந்தைகளுக்கு இலவசமாகப் பசும்பால் கொடுக்கிறேன். சுற்றுவட்டாரப் பொதுமக்களும் ரொம்ப ஆர்வமாக வாங்கிக்கிட்டுப் போறாங்க. கொரோனாவுக்கு அப்புறம் பல கட்டுப்பாடுகள் முன்னாடி மாதிரி வியாபாரம் பெரிசா இல்லை. வருமானமும் இல்லை. மொதல்ல எப்படி வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்குப் பசும்பால் இலவசமாகக் கொடுக்கப்போறோம்னு தோணுச்சு. ஆண்டவன் பார்த்துக்குவாருன்னு சொல்லிட்டு திட்டத்தை ஆரம்பிச்சிட்டேன். ரொம்ப நாள் திட்டம் நிறைவேறிடுச்சு" என்கிறார் உற்சாகத்துடன்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.