கோபாலபட்டிணத்தில் நாளை (ஜன.13) தெருநாய்கள் பிடிக்கும் பணி: ஊராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டிணம் கிராமத்தில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைப் பிடிக்க ஊராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாய் பிடிக்கும் பணி:
அதன்படி, நாளை (13.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று கிராமத்தில் அனுமதியின்றி சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி நடைபெற உள்ளது.

வளர்ப்பு நாய்கள் குறித்து எச்சரிக்கை:
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், நாளை நாய் பிடிக்கும் பணி நடைபெற உள்ளதால், கோபாலபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், வெளியில் சுற்றித் திரியும் நாய்கள் தெருநாய்களாகக் கருதப்பட்டுப் பிடிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்குக் கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments