நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டிணம் கிராமத்தில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைப் பிடிக்க ஊராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாய் பிடிக்கும் பணி:
அதன்படி, நாளை (13.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று கிராமத்தில் அனுமதியின்றி சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி நடைபெற உள்ளது.
வளர்ப்பு நாய்கள் குறித்து எச்சரிக்கை:
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், நாளை நாய் பிடிக்கும் பணி நடைபெற உள்ளதால், கோபாலபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், வெளியில் சுற்றித் திரியும் நாய்கள் தெருநாய்களாகக் கருதப்பட்டுப் பிடிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்குக் கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.