12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் ஆலோசனைப்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இப்போது எதுவும் கூற முடியாது. 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்கள் உள்ளன.
12-ம் வகுப்பு இறுதித் தேர்வை சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் தேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்க முடியும். முதல்வரின் ஆலோசனைப்படி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பாடப் புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து நம்மால் இப்போது யோசிக்க முடியாது.
நிலைமை சரியானபிறகு, முதல்வரின் தலைமையில் மருத்துவக் குழு, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித்துறை ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதனால் பள்ளிகள் திறப்புக்கு நீண்ட காலம் ஆகலாம்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.