கந்தர்வகோட்டை தைலமரக்காட்டில் முதியவர் பிணம்.!



தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அருகே உள்ள சூலியக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரையன்(வயது 76). இவர் நேற்று காலை கந்தர்வகோட்டையில் தஞ்சாவூர் மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அடுத்த தைலமர காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்.


இது பற்றி தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் அங்கு சென்று, வீரையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments