மீமிசலில் நாளை 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முழு கடையடைப்பு நடைபெற உள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
மீமிசலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து அனைத்து தரப்பினருடன், வர்த்தக சங்கத்தினர் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக சங்கிலி தொடராக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாளை 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை மீமிசலில் உள்ள மளிகை, காய்கறி, பழக்கடை, டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு, சுய ஊரடங்கு கடைப்பிடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.