அறந்தாங்கி அருகே ஊராட்சி நிர்வாகத்தில் உறவினர்கள் தலையீடு.! ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!



அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நேற்று அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


மேலும் பெண் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள், ஊராட்சி தலைவரின் செயல்பாட்டிற்கு முரண்பாடான செயல்களை செய்து வருவதாக கூறிய பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணியிடம் பஞ்சாத்தி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டு உள்ள தலைவர் மட்டுமே அனைத்து செயல்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments