கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்கம் கோரிக்கை.!



மணமேல்குடியில், புதுக்கோட்டை மாவட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் ஆரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால், கடல்வளம் அழிந்து வருகிறது. 

இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டை மடிவலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது உரிய நடவடிக்கையை மீன்வளத்துறை எடுக்காவிட்டால், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வருகிற 25-ந் தேதி மணமேல்குடியில் அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் துணை செயலாளர் முகமது மைதீன், பொருளாளர் பசுபதி, ஆலோசனை குழு உறுப்பினர் சந்திரன், சத்தியமூர்த்தி உள்பட மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments