அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இணையதள வகுப்புகள் தொடக்கம்.!



ஆவுடையார்கோவில் அருகே உள்ள அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.


முதலாவதாக இளங்கலை வணிகவியல், இளங்கலை நிர்வாகவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை கல்லூரி முதல்வர் கண்ணன் இணைய வழியாக தொடங்கி வைத்தார். இதில் வணிகவியல் துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகவியல் துறைத்தலைவர் ரத்தின சிவக்குமார் மற்றும் துறை போரசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments