அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கொடியேற்ற நிகழ்வு,அதிக உறுப்பினர்களை இணைத்த உறவுகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள்,மற்றும் நடக்க இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் .!




அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில 5 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு இதில் கோபாலபட்டினம் அவுலியா நகர் பகுதியில் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு கொடிக்கம்பம் ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கடந்த அக்டோபர் -02,03,04 மூன்று நாட்களாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது அதிக உறுப்பினர்களை இணைத்த திரு-எட்வின்,திரு செல்வகுமார், ரிஸ்வான், பாராட்டுச் சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கப்பட்டன.


மேலும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வும்  நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ ஹிமாயுன் கபீர் கலந்து கொண்டார். 





இதில் கலந்து கொண்ட மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி நாம் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு.

அறந்தாங்கி சட்டமன்ற நாம் தமிழர் உறவுகளின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 

தகவல்:
முகம்மது நூருல்லா 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments