நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் .!




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், தண்டலை ஊராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் கருப்பாக்குறிச்சி கிராமத்தில் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணியை தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவருமான பரணிகார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய குழு துணைத்தலைவர் சீனியார், ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் அல்லிராணி விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments