புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 265 சத்துணவு அமைப்பாளர், 552 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 24-ந் தேதி முதல் நேற்று வரை அந்தந்த அலுவலகங்களில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பித்தனர். கடைசி நாளான நேற்றும் கூட்டம் அலைமோதியது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி அலுவலகங்களிலும் என மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பபடிவங்களை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணி இன்று(அதாவது நேற்று) இரவு வரை நடைபெறும். அதன்பின் தான் முழு எண்ணிக்கை தெரியவரும். சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி குறைவாக இருந்தாலும் பட்டதாரி பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்“ என்றார்.
இந்த பணிக்கு விண்ணபிக்க நேற்று கடைசி நாள் என்பதால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் விண்ணப்பம் செய்தவர்கள் ஜெராக்ஸ் கூட எடுக்க முடியாமல் தவித்தனர். இதேபோல, தபால் துறையில் வேலைக்கான பணிக்கும் விண்ணப்பம் செய்வதற்கு நேற்று கடைசிநாள் என்பதால் அதற்கு விண்ணப்பம் செய்தவர்களும் மின் தடையால் அவதிக்குள்ளாகினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.