கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று காலை 210 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் கட்டிவயல் பகுதியை சேர்ந்த நாகசாமி (48) மற்றும் அவருடன் 3 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இவர்கள் 15 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது நாகசாமி திடீரென்று மயக்கம்அடைந்து படகில் விழுந்தார். சக மீனவர்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர் .ஆனால் அவர் கண் விழிக்கவில்லை. இதனால் உடனே அவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பினர்.
கரைக்கு வந்ததும் மயக்கம் அடைந்த நாகசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் அவரை சோதனை நடத்தியதில் அவர் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். பின் கடலோர காவல் குழுமத்தினர் இறந்த நாகசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.