கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்... மீன் பிடித்து கொண்டிருந்தபோது படகில் மயங்கி விழுந்து தீடீர் உயிரிழப்பு.!



கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று காலை 210 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

அதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் கட்டிவயல் பகுதியை சேர்ந்த நாகசாமி (48) மற்றும் அவருடன் 3 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் இவர்கள் 15 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது நாகசாமி திடீரென்று மயக்கம்அடைந்து படகில் விழுந்தார். சக மீனவர்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர் .ஆனால் அவர் கண் விழிக்கவில்லை. இதனால் உடனே அவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பினர். 

கரைக்கு வந்ததும் மயக்கம் அடைந்த நாகசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் அவரை சோதனை நடத்தியதில் அவர் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். பின் கடலோர காவல் குழுமத்தினர் இறந்த நாகசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments