‘நிவர்’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்பட கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மணமேல்குடி அருகே நேற்று கடல் திடீரென 100 மீட்டருக்கு உள்வாங்கியது. இது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் சிலர் கூறுகையில், பொதுவாக கோடை காலத்தில் கடல் நீர் வற்றி உள்வாங்கும். ஆனால், தற்போதைய மழை மற்றும் புயல் நேரத்தில் கடல் நீர் உள் வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடலில் அலை எழும்பாமல் அமைதியாக காணப்படுவதும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக அனைத்து காலங்களிலும் கடல் நீர் உள்வாங்குவது என்பது வழக்கமான நிகழ்வு தான். ஆகவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.