வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறைந்துவிடும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப்பிலும் இதனை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை உங்களால் மறைய வைக்க முடியாது.
இந்த ஆப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனை பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். எத்தனை நாட்களுக்குள் மெசேஜ்கள் அழிய வேண்டும் என்பதை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. ஒருவேளை இந்த ஆப்ஷனை On செய்திருக்கும் போது, வாட்ஸ் அப்பை 7 நாட்களாக பார்க்கவில்லை என்றால், மெசேஜ் தானாக மறைந்துவிடும். ஆனால் அந்த மெசேஜின் முன்னோட்டம் Notification- ல் வரும். அதேபோல் இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்துவிட்டால் மறையும் மெசேஜ்களை Backup எடுக்கும் வசதி இருக்காது
நீங்கள் யாருடைய Chat-ல் மெசேஜ்கள் மறைய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்கள் பெயரை Open செய்து கொள்ளவும். அதில் உள்ள Disappearing Messages ஆப்ஷனை கிளிக் செய்தால், Continue என்ற வார்த்தை வரும். அதனை கிளிக் செய்து, on/off ஆப்ஷனில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
குரூப் மெசேஜ்களுக்கு இதே முறைதான் உள்ளது. நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டுமே இந்த புதிய ஆப்ஷனை பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.