புதுக்கோட்டை ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு



      

 
    புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைவராக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம்.
கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் 18.11.2020-ம் தேதி காலை 10 மணிக்கு கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் அணுகவும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்சி பெறாதவர்களாக இருக்கலாம்.

18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும், உடற்தகுதிகள் காவல்துறையை போன்றது, எவ்வித குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரிய படித் தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments