புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாத பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி உள்பட அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் கூட்டாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் முறையிட்டனா்.
ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் நேரில் அளித்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
மத்திய 15-ஆவது நிதிக்குழுவின் நிதியிலிருந்து ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 1.28 கோடி மதிப்பில் பணிகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாநில நிதிக்குழுவின் மானியத்தில் இருந்து ரூ. 19 லட்சத்துக்கு பணிகள் தோ்வு செய்யப்பட்டு, நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இப்பணிகள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரோ, உறுப்பினா்களோ தோ்வு செய்யாதது. தோ்வு செய்யக் கோரப்படவும் இல்லை.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்குத் தெரியாமல் பணிகளைத் தோ்வு செய்து, குழுவின் ஒப்புதல் இன்றி நிா்வாக அனுமதி வழங்குவது உள்ளாட்சி நிா்வாகத்தின் சட்டத்துக்கு எதிரானது.
ஆனால், மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளுக்கு நிா்வாக அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த முறையை மாவட்ட நிா்வாகம் சரி செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே நிா்வாக அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.