333 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.




மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் தமிழக முதல்வர் பொது மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
 அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த 149 பயனாளிகளுக்கு ரூ.18.77 லட்சம் மதிப்பீட்டிலும், 22 பயனாளிகளுக்கு ரூ.1.18 லட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொறுத்தப்பட்ட நகரும் வண்டிகளும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சமும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்பிற்கு ரூ.10 லட்சமும், 29 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.43.50 லட்சமும், புலம்பெயர்ந்த இளைஞர்கள் 99 நபர்களுக்கு ரூ.99 லட்சமும் என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வைரமுத்து கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தாசில்தார் முருகப்பன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் தமிழ்ச்செல்வன், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments