அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் கடந்த பல நாட்களாக கீழே தொங்கும் வயர்களால் விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவடடம், அறந்தாங்கி நகரின் முக்கிய சந்திப்பாக கட்டுமாவடி முக்கம் விளங்குகிறது. நகரின் முக்கிய வர்த்தக பகுதிகளுக்கு செல்ல கட்டுமாவடி முக்கம் வழியாகவே செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் உள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டுமாவடி முக்கத்தை கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் கட்டுமாவடி முக்கம் பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த பல நாட்களுக்கு முன்பு வயர் ஒன்று உயரத்தில் கட்டப்பட்ட கட்டு அவிழ்ந்து, வயர் சாலையின் ஓரம் தொங்குகிறது. சாலையின் ஓரத்தில் கீழே தொங்கும் வயரில் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நிலையூர் கணேசன் கூறியது:அறந்தாங்கி நகரின் முக்கியப் பகுதியான கட்டுமாவடி முக்கம் பகுதியில் மேலே கட்டப்பட்ட வயர்கள், தற்போது பல நாட்களாக கீழே கைக்கு எட்டும் தூரத்தில் தொங்குகின்றன. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் இந்த வயரில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த வயர் குறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கீழே தொங்கும் வயரால் விபத்து நேரும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.எனவே, அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் கேட்பாரற்று விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுத்தும் வகையில் தொங்கும் வயரை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.