வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் தாழ்வுமண்டலம் தீவிர புயலாக (நிவர்) காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நிவர் புயலின் அடுத்தக்கட்டம் எப்படி இருக்கும்?, அதன் நகர்வு எங்கே இருக்கும்?, எந்த பகுதிகளில் கரையை கடக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) புயலாகவும், அதனைத்தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நாளை (புதன்கிழமை) பிற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் ஏனைய வடமாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
புயல் தொடர்பாக அரசு விடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்றவேண்டும். அத்தியாவசியமான உணவு, குடிநீர், மருந்து பொருட்களை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.