கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்



வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க கடந்த 21-ந்தேதி முதல் மீன் வளத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.

இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புயல் கரையை கடந்தது. இதனால் கடற்கரை பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதனை தொடந்து மீன்வளத்துறை சார்பாக விதிக்கப்பட்ட தடை தளர்வு செய்யப்பட்டது. இதனால் இன்று (சனிக்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments