மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக்கோரி கடந்த 26 தினங்களாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 புதிய வேளாண் சட்டங்களையும், மத்திய அரசை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாய அமைப்புகள் சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமமக்கள் தடுத்து நிறுத்தம்
அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அண்ணாபண்ணை அகரப்பட்டி, நிலையபட்டி, முதலிப்பட்டி, வேளாம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர்களோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றவர்களை அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அண்ணா பண்ணையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.